YouTube ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்சன் விலை அதிகரிப்பு புதிய விலை என்ன

Updated on 28-Aug-2024
HIGHLIGHTS

வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான YouTube நாட்டில் அதன் பிரீமியம் சேவையின் விலையை உயர்த்தியுள்ளது

இந்த விளம்பரமில்லா சேவையின் அனைத்து சந்தா திட்டங்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன

இதில் தனிநபர், குடும்பம் மற்றும் மாணவர் சப்ஸ்க்ரிப்சன் திட்டங்கள் அடங்கும்

வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான YouTube நாட்டில் அதன் பிரீமியம் சேவையின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விளம்பரமில்லா சேவையின் அனைத்து சந்தா திட்டங்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் தனிநபர், குடும்பம் மற்றும் மாணவர் சப்ஸ்க்ரிப்சன் திட்டங்கள் அடங்கும். இந்தச் சேவையில், பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வது, பேக்ரவுண்டில் வீடியோக்களைப் பார்க்க அல்லது ம்யூசிக் கேட்கும் வசதி மற்றும் பிக்சர்-இன்-பிக்சர் (PIP) மோடை போன்ற அம்சங்களைப் வழங்குகிறது

YouTube யில் விலை அதிகரிப்பு என்ன

யூடியூப் பிரீமியத்தின் தற்போதைய சப்ஸ்க்ரைபர்களுக்கு புதிய கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஒரு பயனருக்கான அதன் தனிப்பட்ட திட்டத்தின் கட்டணம் மாதத்திற்கு ரூ.129லிருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பேமிலி திட்டத்தைக் கொண்ட பயனர்கள் மாதத்திற்கு ரூ.299 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில், இந்த சேவையை ஐந்து பயனர்கள் வரை அணுகலாம். முன்னதாக இதன் விலை ரூ.189 ஆக இருந்தது.

இதன் மாணவர் திட்டம் மாதம் ரூ.79ல் இருந்து ரூ.89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் ப்ரீபெய்டு திட்டங்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய பயனர்களுக்கு ஒரு மாத சோதனை கிடைக்கிறது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கட்டுப்பாட்டில் உள்ள யூடியூப், டீப்ஃபேக்குகள் குறித்து கடந்த ஆண்டு மத்திய அரசால் எச்சரிக்கப்பட்டது. யூடியூப் உட்பட சில சமூக ஊடக தளங்களில், நாட்டின் சட்டத்தின் கீழ் ஆபாசமான அல்லது தவறான தகவல்களை பரப்பும் டீப்ஃபேக் மற்றும் உள்ளடக்கத்தை இடுகையிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இந்த விதிகளின்படி, குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், ஆபாசமான அல்லது மற்றொரு நபரைப் பின்பற்றும் கன்டென்ட் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) ஆப்யில் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் போலி வீடியோக்களை உருவாக்கும் வழக்குகள் அதிகரித்துள்ளன. இத்தகைய வீடியோக்கள் டீப்ஃபேக் என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு எதிராக புதிய விதிமுறைகளை உருவாக்க அரசு தயாராகி வருகிறது. இந்த விதிமுறைகளின் கீழ், டீப்ஃபேக்குகளை உருவாக்கி அவற்றை நடத்தும் தளங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க, AI தொடர்பான விதிமுறைகள் விரைவில் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படும். நாட்டின் AI சந்தையானது 25-35 சதவிகித கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் (CAGR) 2027 க்குள் $17 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவனம் அமைப்பு Nasscom மற்றும் Boston Consulting Group ஒரு ரிப்போர்டில் கூறியது இந்த வளர்ச்சியின் பின்னணியில் உள்ள காரணங்கள் தொழில்நுட்பத்திற்கான நிறுவனங்களின் செலவு மற்றும் AI யில் முதலீடு அதிகரிக்கும்.

இதையும் படிங்க: உங்க Aadhaar Card தவறாக பயன்படுத்தப்பட்டால் அதை எப்படி கண்டுபிடிப்பது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :