மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் இறுதியாக அதன் பிரீமியம் சந்தா சேவையான ட்விட்டர் ப்ளூவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்கள் ப்ளூ டிக் பெற மற்றும் பிரீமியம் சந்தா சேவையின் அம்சங்களைப் பயன்படுத்த மாதத்திற்கு ரூ.900 செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நிறுவனம் குறைந்த விலையில் ரூ.650 பிரீமியம் சந்தா திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் இன்டர்நெட் பயனர்களுக்கானது. நிறுவனம் கடந்த ஆண்டு ட்விட்டர் ப்ளூவை புதிய வடிவத்தில் வெளியிட்டது . இது முன்னதாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் தொடங்கப்பட்டது.
வலைதள வெர்ஷனுக்கு வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவை வருடாந்திர அடிப்படையில் பெறும் போது ரூ. 6 ஆயிரத்து 800 மட்டுமே செலுத்தினால் போதுமானது. முன்னதாக வெரிஃபைடு டேக் பெற வாடிக்கையாளர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இத்துடன் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போரின் பதிவுகளுக்கு டுவிட்டர் முன்னுரிமை கொடுக்கும். டுவிட் செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் அதிகபட்சமாக ஐந்து முறை அவற்றை எடிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், டுவிட்டர் புளூ சேவை தற்போது இந்தியா, பிரேசில், இந்தோனேசியா என மொத்தம் 15 நாடுகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர், தங்களின் டுவிட்களை எடிட் செய்வது, நீண்ட நேர வீடியோக்களை பதிவிடுவது, 50 சதவீதம் வரை குறைந்த விளம்பரங்களை பெறுவது, புதிய அம்சங்களை முன்கூட்டியே பெற முடியும்.
பயனர்கள் டுவிட்டர் புளூ சேவையை இயக்க தங்களின் ப்ரோஃபைல் படத்தின் இடது புறத்தில் க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் அதிகபட்சம் டுவிட்டர் கணக்கை துவங்கி 90 நாட்கள் கழித்தே டுவிட்டர் புளூ சேவையை பெற முடியும். டுவிட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தி இருப்பவர்கள், தங்களின் புகைப்படம், ப்ரோஃபைல் பெயர் உள்ளிட்டவைகளை வெரிஃபைடு பேட்ஜ் வழங்கும் வரை மாற்ற வேண்டாம் என டுவிட்டர் கேட்டுக் கொண்டுள்ளது.