IT யில் கலக்கி வரும் ஸ்ரீதர் வேம்பு சாப்பிட்ட இந்த சாப்பிட்டால் நோயே குணமாகியதாம்.
சோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, கடந்த சில நாட்களாக தனது காலை உணவு பழைய அரிசியாக மாறியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பலர் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியால் (ஐபிஎஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது, இந்த நோய்க்கு இது எளிதான தீர்வு என்று அவர் கூறினார்.
சோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, கடந்த சில நாட்களாக தனது காலை உணவு பழைய அரிசியாக மாறியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை தொடங்கி வெற்றி பெற முடியும் என சாதித்து காட்டியவர் ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. இவர் உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வந்தாலும் தனது விருப்பமான கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை நடத்த நினைத்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை என்ற கிராமத்தில் ஐ.டி. நிறுவனத்தை தொடங்கி பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி மத்திய அரசின் உயர் பதவியான தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினராக ஸ்ரீதர்வேம்புவை நியமனம் செய்தது. கொரோனா காலத்தில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த போதும், ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈர்த்தது. உலக அளவில் கவனம் பெற்று கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி சட்டையில் காணப்படுவார். நவீன கார்களில் செல்ல வசதி இருந்தும் பெரும்பாலும் சைக்கிள்களிலேயே சென்று வருகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீதர்வேம்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் தான் பழைய சாதத்தை சாப்பிட்டு வருவதாவும், அதன் பெருமை குறித்தும் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பலர் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியால் (ஐபிஎஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது, இந்த நோய்க்கு இது எளிதான தீர்வு என்று அவர் கூறினார்.
இந்த பிரச்சனை மனநிலையால் ஏற்படுவதால், இதை ஒரு நோய் என்று ஒதுக்கிவிட முடியாது. பரீட்சை அல்லது நேர்காணலுக்குச் செல்லும்போதும் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு தொடர்ந்து ஏதாவது பயம் இருந்தால் இதை அனுபவிக்கலாம். இந்தப் பிரச்சனை எந்த வயதிலும் வரலாம். இதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறப்படுகிறது.
சிலருக்கு அது வாழ்நாள் தொடர்கதையாக மாறும். இப்பிரச்னையால் பலர் வெளியே செல்லவே அஞ்சுகின்றனர். இந்நிலையில், இந்த நோய்க்கு பழைய சோறுதான் மருந்து என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். இவ்வாறு அந்த பதிவில் ஸ்ரீதர்வேம்பு குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களிலும் இது பகிரப்பட்டு வருகிறது. இந்நோய் பாதிப்புள்ள பலரும் ஸ்ரீதர்வேம்புக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் பழையசோறு, ரெசிபி கேட்டு கருத்து பதிவிடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக சிலர் அதுகுறித்து வீடியோக்களை இணைத்துள்ளனர்.
My daily breakfast for the past year has been fermented "old rice" (பழைய சோறு in Tamil). I religiously adhere to this diet. I suffered from IBS (irritable bowel syndrome) all life and that is now gone. I also suffer a lot less from allergies. Hope this helps some fellow sufferer.
— Sridhar Vembu (@svembu) February 12, 2023
ட்விட்டரில் ஒரு பதிவில், சாதாரண பழைய அரிசி சில ஆண்டுகளாக எனது காலை உணவாகிவிட்டது. எனது பாரம்பரிய முறையில் இந்த உணவை எடுத்து வருகிறேன். எனக்கு பல ஆண்டுகளாக எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளது. ஆனால் தற்போது நோய் குணமாகியுள்ளது. பல ஒவ்வாமைகளும் இருந்தன. அவர்களும் இல்லை. இந்த பதிவு சிலருக்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile