Telecom Bill 2023: அரசு எந்த மெசேஜ் கால் ட்ரேக் செய்ய முடியும் 7 விசயத்தை தெருஞ்சிகொங்க

Updated on 20-Dec-2023
HIGHLIGHTS

Telecom Bill 2023 மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ட்ரெக்கிங் தொடர்பான புதிய விதிகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது

ஹேக்கர்கள் ஒருவரின் கால்கள் அல்லது மெசேஜ்களை கண்காணிக்கும் பட்சத்தில், தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

Telecom Bill 2023 மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதி பெற்றுள்ளது. டெலிகாம் துறையின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என அரசு நம்புகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மொபைல் கால்கள் மற்றும் மெசேஜ்கள் மற்றும் அவற்றின் ட்ரெக்கிங் தொடர்பான புதிய விதிகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது, இதன்படி, அரசாங்கம் விரும்பினால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு யாருடைய கால்கள் அல்லது மெசேஜ்களையும் கண்காணிக்க முடியும்.

Telecom Bill 2023: அரசின் அந்த 7 விஷயங்கள்

1 இது தவிர, இது எந்த பயனரின் மெசேஜ்களையும் இந்த்ரேப்ட் செய்ய முடியும். ஒருவரின் மெசேஜை அனுப்புவதை நிறுத்தலாம். மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பொது நலன் கருதி டெலிகாம் நிறுவனங்களுக்கு எந்தச் மேசெஜயும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அதாவது வெள்ளம், பூகம்பம் அல்லது போர் போன்ற சூழ்நிலைகளில், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

2 ஆனால் ஹேக்கர்கள் ஒருவரின் கால்கள் அல்லது மெசேஜ்களை கண்காணிக்கும் பட்சத்தில், தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். தகவல் தொடர்பு மெசேஜ்களை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது என அரசு நம்புகிறது. இது தவிர, தகவல் தொடர்புக்கு இடையூறு செய்பவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறை மீறினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

3 புதிய டெலிகம்யூனிகேசன் பில் 2023, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், எந்தவொரு டெலிகாம் சேவை அல்லது டெலிகாம் வலையமைப்பையும் தற்காலிகமாக வைத்திருக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது.

4 டெலிகம்யூனிகேசன் bill 2023 டெலிகாம் வலையமைப்பை இடைநிறுத்தும் உரிமையை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

5 புதிய டெலிகாம் bill 2023 யில் சேட்லைட் பிராட்பேண்ட் சேவைகளுக்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இப்போது செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளுக்கு இலவச ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும்.

6 புதிய பில் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் அரசு குறைத்துள்ளது. இதன்படி இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படும். இதுவரை நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி வரை அபராதம் விதிக்கும் விதி இருந்தது.

7 புதிய bill நிறுவனங்களின் திவால், வட்டி தள்ளுபடி மற்றும் அபராதம் தொடர்பான விதிகள் நீக்கப்பட்டுள்ளன. இப்போது அரசாங்கம் ஏலமின்றி DTH நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரம் வழங்கும்.

இதையும் படிங்க:Xmas Realme Sale:Realme ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது 3 ஆயிரம் டிஸ்கவுன்ட்

குறிப்பு – இந்த பில் தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பிறகு இந்த மசோதா சட்டமாகிவிடும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :