இந்திய பேங்க்கள் இந்த புதிய டெக்னாலஜி விரைவில் தொடங்கும்.

இந்திய பேங்க்கள் இந்த புதிய டெக்னாலஜி விரைவில் தொடங்கும்.
HIGHLIGHTS

பேங்க்கள் தொடர்பான மோசடிகளை குறைக்க வங்கிகளால் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பேங்க்களில் தனிநபர்களின் ட்ரான்ஸாக்ஷன்களை சரிபார்க்க face recognition மற்றும் iris scan பயன்படுத்தப்படும்.

இந்த பாதுகாப்பு செயல்முறை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமில்லை.

வரி ஏய்ப்பு மற்றும் மோசடியை குறைக்க இந்திய பேங்க்களால் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு வட்டாரங்கள் எந்த பெயரையும் வெளியிட மறுத்தாலும், சில பிரபலமான பொது மற்றும் தனியார் பேங்க்கள் ஏற்கனவே தங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த இந்த டெக்னாலஜி பயன்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சரிபார்ப்பு படி கட்டாயமில்லை. பான் கார்டு போன்ற வேறு எந்த அடையாள அட்டையும் பேங்க்யிடம் இல்லாத சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்த வேண்டும். 

யூசரின் பிரைவேசி பாலிசி

மனித தரவு செயல்படத் தேவைப்படும் எந்தவொரு டெக்னாலஜியும் வாடிக்கையாளர் தனியுரிமையைப் பற்றி ஏற்கனவே சில கவலைகளைக் கொண்டுள்ளது. வழக்கறிஞரும் சைபர் சட்ட நிபுணருமான Pavan Duggal, "இது பிரைவேசி கவலைகளை எழுப்புகிறது, குறிப்பாக இந்தியாவில் பிரைவேசி, சைபர் கிரைம் பாதுகாப்பு மற்றும் முக அங்கீகாரம் தொடர்பான சட்டங்கள் இல்லாதபோது." 

எந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த பாதுகாப்பு நடைமுறைகள் பொருந்தும்?

பேங்க்யில் ஆதார் அட்டையை மட்டும் பகிர்ந்து கொண்டு ஒரு நிதியாண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பேங்கியில் இருந்து எடுத்தவர்கள் அல்லது டெபாசிட் செய்தவர்கள், பேங்கியின் கோரிக்கையின் பேரில் இந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். 

Unique Identification Authority of India (UIDAI) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த செயல்முறை வாடிக்கையாளரின் ஒப்புதலின் பேரில் மட்டுமே செய்யப்படும். மேலும், பிங்கர் சென்சேர் அங்கீகாரம் தோல்வியடைந்த வாடிக்கையாளர்களுக்கு முகம் மற்றும் கருவிழி அங்கீகாரத்தைப் பயன்படுத்த அனைத்து அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்பு நிறுவனங்களுக்கு UIDAI தொடர்ந்து அறிவுறுத்துகிறது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo