எலக்ட்ரோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் (MeitY) அவசர பணி ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆதார் அட்டை தொடர்பான முக்கியமான செயல்முறையாகும். இதன் கீழ், ஆதார் மூலம் தேவையான அரசு ஆவணங்கள் தானாக புதுப்பிக்கப்படும். இருப்பினும், இந்த செயல்முறையை அறிமுகப்படுத்த சிறிது நேரம் ஆகலாம். தேவையான ஆவணங்களில் தங்கள் வீட்டு முகவரியை மாற்றுவதற்கு பயனர்கள் எந்தவொரு துறை அல்லது அமைச்சகத்திற்கும் செல்ல வேண்டிய தேவையை நீக்கும் செயல்முறையை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது. குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் தங்கள் விவரங்களை புதுப்பிக்கும்போது இந்த வேலை தானாகவே செய்யப்படும்.
டிஜிலாக்கரில் ஆவணங்களைச் சேமிக்க வேண்டிய பயனர்களுக்கு இந்த அமைப்பு முக்கியமாக உதவும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. DigiLocker பயனர்கள் உரிமம், பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க அனுமதிக்கிறது.
இந்த நிலையில், ஆதார் அட்டையில் செய்யப்பட்ட மாற்றங்கள் டிஜிலாக்கரில் உள்ள மற்ற ஆவணங்களிலும் செய்யப்படும். இந்த அம்சத்தைத் தேர்வுசெய்ய விரும்புகிறாரா இல்லையா என்பது முழுக்க முழுக்க பயனரைப் பொறுத்தது.
தற்போது MeitY போக்குவரத்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்ற வரையறுக்கப்பட்ட அமைச்சகங்களுடன் செயல்படுகிறது என்று கூறலாம். இது பிற்பாடு இந்தச் செயல்பாட்டில் மற்ற துறைகளையும் ஈடுபடுத்தலாம், இதனால் பயனர்கள் தானாக பாஸ்போர்ட் போன்றவற்றைப் புதுப்பிக்க முடியும். இதற்காக அரசாங்கம் மென்பொருள் API (Application Programming Interface) ஐ உருவாக்கும்
தகவல்களின்படி, டிஜிலாக்கர் ஆவணங்களை ஆதார் மூலம் புதுப்பிக்க ஒரு ஆட்டோ-அப்டேட் அமைப்பு உருவாக்கப்படும், இது மக்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். இதனுடன், போலி ஆவணங்களின் சாத்தியமும் குறையும். வேலை காரணமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.