இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் ஒரு புதிய AI ஆதரவு சாட்போட்டை அறிமுகப்படுத்தியது, இது மக்கள் தங்கள் ஆதார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும். இது ஆதார் மித்ரா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் PVC நிலையை கண்காணிக்க முடியும். புகாரை பதிவு செய்ய முடியும். மேலும் பல விஷயங்களையும் செய்ய முடியும். ஆதார் மித்ரா என்றால் என்ன, அதை எப்படிப் பயன்படுத்தலாம்.
இதற்காக, UIDAI ஒரு ட்வீட் செய்துள்ளது, அதில், "#ResidentFirst #UIDAI இன் புதிய AI/ML அடிப்படையிலான அரட்டை ஆதரவு இப்போது சிறந்த பயனர் அனுபவத்திற்குக் கிடைக்கிறது. இப்போது பொதுமக்கள் தங்கள் #Aadhaar PVC அட்டையின் நிலையைப் பார்க்கலாம், பதிவுசெய்து குறைகளைக் கண்காணிக்கலாம் https://www. /uidai.gov.in/en/ #AadhaarMitra யில் செல்லவும்.
Aadhaar Mitra, UIDAI யின் புதிய சேட்பாட் ஆகும். இதை நீங்கள் www.uidai.gov.in யில் சென்று அக்சஸ் செய்யலாம். இணையதளத்தில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், ஆதார் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் சாட்போட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் மையத்தின் இருப்பிடம், பதிவு செய்தல், புதுப்பித்தல் நிலை, பிவிசி கார்டு ஆர்டர் நிலை, புகார் நிலை, பதிவு மையம் போன்ற பணிகள் இதில் அடங்கும். AI சாட்பாட் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் கிடைக்கிறது.