Aadhaar Data Leak 81 கோடி இந்திய குடிமக்கள், தகவல்கள் லீக் இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி ?

Updated on 01-Nov-2023
HIGHLIGHTS

Resecurity Firm Report சமீபத்தில் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

81.5 கோடி இந்தியர்களின் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது

Aadhaar Data Leak). இது டார்க் வெப் யில் கிடைக்கிறது

அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Resecurity Firm Report சமீபத்தில் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது (Aadhaar Data Leak). இது டார்க் வெப் யில் கிடைக்கிறது. அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த Aadhaar டேட்டா எப்படி லீக் ஆகியது?

இந்த ஆதார் டேட்டா லீக்கின் மூலம் மக்களின் பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற பல முக்கியமான தகவல்களை உள்ளடக்கியது. இந்த அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டேட்டா பேஸ் மீறும் வாய்ப்பும் உள்ளது. இந்த விவகாரம் குறித்து ICMR இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த அறிக்கையின் படி அக்டோபர் தொடக்கத்தில் டார்க் வெப்பில் மில்லியன் கணக்கான தனிப்பட்ட பதிவுகளை HUNTER (HUMINT) பிரிவு கண்டறிந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்த பதிவுகள் அனைத்தும் விற்கப்பட்டன. இதில் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதார் கார்ட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய Aadhaar டேட்டாவை யார் விற்கிறார்கள்?

‘pwn0001’ என்ற பயனர் அக்டோபர் 9 அன்று ப்ரீச் ஃபோரம்களில் 815 மில்லியன் இந்திய நபர்களின் ஆதார் கார்ட் மற்றும் பாஸ்போர்ட் தகவல்களை அணுகுவதாக பதிவிட்டுள்ளார். அந்த அச்சுறுத்தல் நடிகர் இந்த டேட்டா அனைத்தையும் $ 80,000 க்கு விற்றார்.

இதையும் படிங்க: WhatApp யில் இப்பொழுது ஒரே நேரத்தில் 31 பேருக்கு வீடியோ மற்றும் வொயிஸ் கால் செய்ய முடியும்

இந்திய குடிமக்களின் பல டேட்டா டார்க் வெப்பில் ‘pwn0001’ மூலம் விற்கப்படுகின்றன. இந்த டேட்டாக்களின் பெயர், போன் நம்பர் பாஸ்போர்ட், தந்தையின் பெயர், வயது, ஆதார் எண், முகவரி போன்ற பல முக்கிய தகவல்கள் உள்ளன. வெரிபை செய்யப்பட்ட இந்த தகவலின் படி ஆதாரை வழங்கும் அரசாங்க போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட pwn0001 ஆல் ஷேர் செய்யப்பட்ட நான்கு பிரிவுகளில் இத்தகைய சான்றுகள் காணப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணையில் CBI இணைந்ததுள்ளது

இந்த விவகாரத்தில் CBI விசாரணை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக ஜூன் மாதம், தடுப்பூசி போடுபவர்களின் தனிப்பட்ட தரவுகள் மீறப்பட்டு டெலிகிராமில் கசிந்தது.

உங்களின் ஆதார் டேட்டா லீக் ஆகாமல் பாதுகாப்பாக வைக்க என்ன செய்வது?

அரசு 2009-ம் ஆண்டு ஆதார் கார்ட் வழங்கத் தொடங்கியது. இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. உங்கள் ஆதார் கார்ட் தகவல்கள் லீக் செய்யப்டாமல் பாதுகாக்க விரும்பினால், masked ஆதாரையும் பயன்படுத்தலாம். இதில் உங்கள் ஆதார் கார்டின் முழு நம்பர்கள் தெரியாது இதனுடன், உங்கள் பயோமெட்ரிக்ஸைப் லோக் மூலம் உங்கள் ஆதார் டேட்டா ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :