Truecaller இந்தியாவில் கால் ரெக்கார்டிங் அம்சம் அறிமுகம் செய்துள்ளது

Truecaller இந்தியாவில் கால் ரெக்கார்டிங் அம்சம் அறிமுகம் செய்துள்ளது
HIGHLIGHTS

Truecaller நாட்டில் ஆர்டிபிசிய இன்டலிஜன்ஸ் (AI) இயங்கும் கால் ரெக்கார்டிங் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் கால்களை ரெக்கார்டிங் செய்ய முடியும்

கடந்த ஆண்டு, Truecaller இந்த அம்சங்களை அமெரிக்காவில் கிடைக்கச் செய்தது.

ஸ்மார்ட்ஃபோன்களுக்கான காலர் ஐடி ஆப்பான Truecaller நாட்டில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) இயங்கும் கால் ரெக்கார்டிங் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் கால்களை ரெக்கார்டிங் செய்ய முடியும். இதனுடன், AI உதவியுடன் அவற்றைப் படியெடுக்கும் வசதியையும் பெறுவார்கள். கடந்த ஆண்டு, Truecaller இந்த அம்சங்களை அமெரிக்காவில் கிடைக்கச் செய்தது.

Truecaller யின் கால் ரெக்கார்டிங் அம்சம்

இந்த ஆப்ஸின் பேமன்ட் பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் இருக்கும். இதன் மூலம், பயனர்கள் நேரடியாக ஆப்யிர்க்குள் கால்களை ரெக்கார்டிங் செய்ய முடியும் என்றும், இதற்கு மூன்றாம் தரப்பு ஆப் எதுவும் தேவையில்லை என்றும் Truecaller தெரிவித்துள்ளது. இதனுடன், நிறுவனம் AI ஐப் பயன்படுத்தி டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தையும் வழங்கியுள்ளது. இதன் மூலம், ரெக்கார்ட் செய்யப்பட்ட கால்களின் டிரான்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். இதற்கு முன்பே, Truecaller பயனர்களுக்கு கால் ரெக்கார்ட் செய்யும் வசதியை வழங்கியது, ஆனால் கூகிள் கட்டுப்பாடுகளை விதித்த பிறகு அதை நிறுத்த வேண்டியிருந்தது.

கூகுள் யின் Pixel 8 சீரிஸ் மற்றும் Samsung யின் AI சப்போர்ட் கொண்ட Galaxy ஸ்மார்ட்போனில் கால்களை ட்ரேன்ஸ்பர் செய்யும் வசதியை வழங்கப்படுகிறது, கடந்த ஆண்டு, ட்ரூகாலர் இந்த காலர் அடையாள சேவையை உலகளவில் பிரபலமான வாட்ஸ்அப்பில் மேசெஜ்களுக்க்ன அறிமுகப்படுத்தியது. இது வெப்சைட்டில் ஸ்பேம் கால்களை தவிர்ப்பதை பயனர்கள் எளிதாக்கும். இந்தியா உட்பட பல நாடுகளில் ஸ்பேம் மற்றும் டெலிமார்க்கெட்டிங் கால்கள் அதிகரித்துள்ளன. Truecaller யின் அறிக்கையில், நாட்டில் உள்ள பயனர்கள் மாதத்திற்கு சராசரியாக 18 ஸ்பேம் கால்களை பெறுவதாகக் கூறப்பட்டது.

நாட்டின் டெலிகாம் ரெகுலேட்டர் Reliance Jio மற்றும் Bharti Airtel போன்ற டெலிகாம் நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பில்ட்டர் பயன்படுத்தி தங்களின் நெட்வார்கர்ஸ் யில் டெலிமார்க்கெட்டிங் கால்களை தடுப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டன. அத்தகைய தீர்வை செயல்படுத்த டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக Truecaller கூறியிருந்தது.

ட்ரூகாலர் தனது முதல் பிரத்யேக அலுவலகத்தை ஸ்வீடனுக்கு வெளியே பெங்களூரில் திறந்துள்ளது. நாட்டிற்கான சிறப்பு அம்சங்களை மேம்படுத்த இந்த அலுவலகம் பயன்படுத்தப்படும். ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தனது பிஸ்னஸ் தொடங்கியது. இந்த அலுவலகத்தில் சுமார் 250 பணியாளர்கள் உள்ளனர். நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் இதில் உள்ளன.

இதையும் படிங்க WhatsApp profile போட்டோவுக்கு இனி அதி பயங்கர செக்யூரிட்டி

Truecaller ஆனது சுமார் 35 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது, இவர்களில் சுமார் 25 கோடி பயனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதன் தளத்தில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்த நாட்டில் தனித்துவமான வாய்ப்புகள் இருப்பதாக அது கூறுகிறது. ட்ரூகாலர் அதன் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் திறன்களுக்கு முக்கியமான தீர்வுகளை மேம்படுத்துவதற்குப் பெற்ற கருத்துகள் உதவியுள்ளன என்று கூறியிருந்தார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo